மக்களுக்கு பொருளாதார பலம் அளிக்கும் கும்பமேளா மோடி பெருமிதம்

மகா கும்பமேளா நிகழ்வு சமூகத்தை வலுவூட்டுவது மட்டுமின்றி மக்களுக்கு பொருளாதர பலத்தையும் அளிக்கிறது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த முறை நடந்த கும்பமேளாவின் போது இங்கு புனித நீராடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இன்றைக்கு மறுபடியும் கங்கை தாயின் காலடியில் ஆசி பெறும் பாக்கியம் கிடைத்துள்ளது.

தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், அதை தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கவும் மகா கும்பமேளாவை நம் துறவிகள் நுாற்றாண்டு காலமாக பயன்படுத்தி வந்தனர். அன்றைய காலகட்டத்தில் கூட, சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக கும்பமேளா இருந்துள்ளது.

கடந்த கால ஆட்சிகளில் கும்பமேளாவுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. பக்தர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகினர். அதை அப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை. நம் கலாசாரத்துடன் அவர்கள் விலகி இருந்தே அதற்கு காரணம்.

ஆனால் இன்றைக்கு இந்திய கலாசாரத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வைத்துள்ள அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ளன. எனவே தான் இந்த கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற பிரமாண்ட நிகழ்வுகளில் துப்புரவு பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த நிகழ்வில் 15,000 துப்புரவு பணியாளர்கள் இந்த நகரின் துாய்மைப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

துப்புரவு பணியாளர்களின் பாதங்களை, 2019ல் சுத்தம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. இந்த கும்பமேளா நிகழ்வு, சமூகத்தை வலுவூட்டுவது மட்டுமின்றி, மக்களுக்கு பொருளாதார பலத்தையும் அளிக்கிறது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.