கும்பமேளா மூலம் ரூ 30 கோடி வருமானம் ஈட்டிய படகோட்டி குடும்பம் – யோகி ஆதித்யநாத்

கும்பமேளாவின் மூலம் படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

உ.பி.யில் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன.13ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி நிறைவு பெற்றது. எதிர்பார்ப்புக்கும் மேலாக 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மேளாவில் பங்கேற்று புனித நீராடினர். இந்நிலையில், சட்டசபையில் கும்பமேளா விழாவால் படகு ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தது. இதற்கு சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்து கூறியதாவது;

கும்பமேளாவில் நிகழ்ந்த வெற்றிக்கதை ஒன்றை நான் கூறுகிறேன். பிரயாக்ராஜில் 130 படகுகளை வைத்து ஒரு குடும்பம் தொழில் செய்து வருகிறது. ஒவ்வொரு படகு மூலம் அவர்கள் ரூ.50,000 முதல் ரூ.52,000 வரை வருமானம் ஈட்டினர்.

கும்பமேளா நடந்த 45 நாட்களில் அவர்கள் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளனர். ஒவ்வொரு படகு மூலம் அவர்களுக்கு ரூ,30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

மகா கும்பமேளா விழாவுக்காக ரூ.7500 கோடி முதலீடு செய்யப்பட்டு, ரூ,3 லட்ம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முதலீடு என்பது கும்பமேளாவுக்கு என்று மட்டும் அல்லாமல் அதன் மூலம் பெறும் உபரி வருமானம், வளர்ச்சி ஆகியவற்றுக்காகவும் செலவிடப்பட்டது.

இந்த விழா மூலமாக ஓட்டல் தொழிலில் ரூ.40,000 கோடி, போக்குவரத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி, சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.300 கோடி வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...