கும்பமேளாவை இழிவுபடுத்துவோர் அடிமைமனநிலை உடையவர்கள் – பிரதமர் மோடி கடும் விமர்சனம்

அடிமை மனநிலை உடைய சில தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நாட்டின் மத மற்றும் கலாசார மரபுகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக நடந்த உயிரிழப்புகள், 300 கி.மீ., துாரம் வரையிலான போக்குவரத்து நெரிசல்களை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இது மஹா கும்பமேளா அல்ல; மரண கும்பமேளா’ என, தெரிவித்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி தந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்புரில், ஸ்ரீ பாகேஷ்வர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

ஹிந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள் பல நுாற்றாண்டுகளாக பல்வேறு வேடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அடிமை மனநிலை உடையவர்கள். வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நம்பிக்கைகள், கோவில்கள், துறவியர், கலாசாரம் மற்றும் மரபுகளை தாக்குகின்றனர்.

ஹிந்து பண்டிகைகள், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகின்றனர்.

நம் நாட்டின் சமூக ஒற்றுமையை உடைப்பதே இந்த கும்பலின் நோக்கம். நம் மதம் மற்றும் கலாசாரம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.

இது போன்றவர்களை ஆதரித்து, நம் நாட்டையும், ஹிந்து மதத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபடுவது பல காலமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்� ...

இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 ...

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் த� ...

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் – பிரதமர் மோடி பாராட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய � ...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இந்தியா அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் ...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச� ...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போருக்கு செல்வேன் – நயினார் நாகேந்திரன் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என ...

‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கே ...

‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!! பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‛ஆபரேஷன் சிந்துார்' ...

பாக்., ஆதரவு தேசவிரோதிகள் 43 பேர் ...

பாக்., ஆதரவு தேசவிரோதிகள் 43 பேர்  கைது இந்திய மண்ணில் இருந்துகொண்டு பாக்.,கிற்கு ஆதரவுதெரிவித்த தேசவிரோதிகள் 43 ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...