கும்பமேளாவை இழிவுபடுத்துவோர் அடிமைமனநிலை உடையவர்கள் – பிரதமர் மோடி கடும் விமர்சனம்

அடிமை மனநிலை உடைய சில தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நாட்டின் மத மற்றும் கலாசார மரபுகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக நடந்த உயிரிழப்புகள், 300 கி.மீ., துாரம் வரையிலான போக்குவரத்து நெரிசல்களை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இது மஹா கும்பமேளா அல்ல; மரண கும்பமேளா’ என, தெரிவித்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி தந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்புரில், ஸ்ரீ பாகேஷ்வர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

ஹிந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள் பல நுாற்றாண்டுகளாக பல்வேறு வேடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அடிமை மனநிலை உடையவர்கள். வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நம்பிக்கைகள், கோவில்கள், துறவியர், கலாசாரம் மற்றும் மரபுகளை தாக்குகின்றனர்.

ஹிந்து பண்டிகைகள், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகின்றனர்.

நம் நாட்டின் சமூக ஒற்றுமையை உடைப்பதே இந்த கும்பலின் நோக்கம். நம் மதம் மற்றும் கலாசாரம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.

இது போன்றவர்களை ஆதரித்து, நம் நாட்டையும், ஹிந்து மதத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபடுவது பல காலமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...