பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அவுரங்காபாத் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2014ல் பாதுகாப்பு துறையில் ரூ.600 கோடியாக இருந்த ஏற்றுமதி 2024ல் ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.
ஏற்றுமதியை 2029- 30ல் ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. தற்போது, பாதுகாப்பு தளவாடங்கள் சார்ந்த உற்பத்தி மதிப்பு ரூ.1.60 லட்சம் கோடியாக உள்ளது. இதனை ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |