நாட்டின் ஆயிரக்கணக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதுங்கள் – அமித்ஷா

“நம் நாட்டின் வரலாற்றை முகலாயர் காலத்தில் இருந்து ஆங்கிலேயர் காலம் வரைக்குமாக சுருக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் வரலாற்றை உண்மைகளுடன் எழுதி, பெருமையுடன் உலகிற்கு முன்வைக்க வேண்டும்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு நிறுவனமான ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ சார்பில் ‘ஜம்மு – காஷ்மீர் அண்ட் லடாக் த்ரூ த ஏஜஸ்’ என்ற வரலாற்று புத்தகம் டில்லியில் வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கின் வரலாறு படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகிலேயே கலாசாரத்தினாலான எல்லைகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் ஒடிசா வரையிலும் கலாசாரத்தின் காரணமாக நாம் இணைந்துள்ளோம். நாடுகளை புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களால், நம் நாட்டை பற்றி வரையறுக்க முடியாது.

 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காஷ்மீர் மற்றும் ஜீலம் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் உள்ளன. எனவே, காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. சட்டத்தைப் பயன்படுத்தி அதைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத்தையே நீக்கிஉள்ளோம்.

ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காக எழுபட்ட இந்திய வரலாற்றில் முகலாயர்கள் காலம் முதல் ஆங்கிலேயர்கள் காலம் வரையிலான சில நுாறு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இந்திய வரலாற்றாசிரியர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் வரலாற்றை உண்மைகளுடன் எழுதி உலகத்தின் முன் பெருமையுடன் முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...