சிறுமின்-புத்தகத்தைப் பகிர்ந்துள்ளேன் வாசித்துமகிழுங்கள்

பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக் கிழமை(டிச.25) 96 ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள நிலையில், 95 ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் சிறுமின்-புத்தகத்தை வாசித்து மகிழுங்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொருமாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின்குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதில் அந்த மாதம் நிகழ்ந்தமுக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல் படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச.25) காலை 11 மணிக்கு மனதின்குரல் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிமூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இது 96 ஆவது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஆகும்.

இந்நிலையில், கடந்தமாத மனதின் குரல் நிகழ்ச்சியின் அடிப்படையில் ஒரு சிறுமின்-புத்தகத்தைப் பகிர்ந்துள்ளேன் வாசித்துமகிழுங்கள் என்று மோடி கூறியுள்ளார்.

அவா் சனிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உலகளாவிய நன்மை மற்றும் உலகநலனில் கவனம் செலுத்த ஒரு பெரிய வாய்ப்பு, விண்வெளித்துறையில் நமது தொடர் வெற்றி, இசைக்கருவிகளின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கடந்த மாத ‘மன் கி பாத்’ (நவம்பர் 2022) நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான தொகுப்பை உள்ளடக்கிய ஒரு சிறுமின்-புத்தகத்தை பகிர்ந்துள்ளேன் வாசித்து மகிழுங்கள்.” என்று கூறியுள்ளார்.

http://davp.nic.in/ebook/h_nov/index.html

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.