திமுகவும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணாமலை

”கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும்”, என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அப்பகுதி மக்கள் இன்று இரவு நம்மதியாக தூங்கப் போகின்றனர்.

5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு பயன்பாடு தமிழகத்தில் இருந்தது என்ற ஆதாரத்தை முதல்வர் முன்வைத்துள்ளார். இது ஒவ்வொரு தமிழனுக்கும் சந்தோசமான விஷயம். தமிழனாக பெருமைப்பட்டு கொள்வோம்.

திருப்பரங்குன்றம் முருகனின் ஸ்தலம். ஆண்டாண்டு காலமாக எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும் ஸ்தலம். 1931ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக உள்ளது. தி.மு.க., தூண்டுதலின் பேரில், எம்.பி., நவாஸ் கனி பிரச்னையை உருவாக்குகிறார். திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பா.ஜ., பெரிய இயக்கத்தை நடத்தும்.ஒரு எம்.பி., மதமோதலுக்கு காரணமாக இருக்கிறார். மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது முட்டாள்தனமானது. நாட்டின் எல்லையை திருத்துவதற்கு அரசியலமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், செய்யவில்லை. கச்சத்தீவை கொடுத்ததினால், இந்தியாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒன்றும் கிடைக்கப்போவதும் இல்லை. ஒப்பந்தம் போட்ட போது முதலில் அங்கு மீனவர்கள் வலையை உலர்த்திக் கொள்ளலாம் என நாடகம் போட்டனர். பிறகு அதனை ரத்து செய்துவிட்டனர்.கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு குறித்து பிரதமர் பேசுகிறார் என்றால், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால், பிரதமர் பேச மாட்டார்.

நாங்கள் ஈ.வெ.ரா.,கொள்கையை ஏற்கவில்லை என்றாலும் அவரை அவமானப்படுத்த மாட்டோம். மக்கள் அவரை மறந்து விட்டனர். புது தலைமுறை வந்துள்ளது. அவர்களின் அரசியல் மொழி வேறு. சீமான் வேறு மாதிரி அணுகுமுறையை கொண்டு உள்ளார்.ஈ.வெ.ரா.,வை தாண்டி எங்கோ சென்றுவிட்டோம். வளர்ச்சி அரசியல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் பேசவே எங்களுக்கு நேரமில்லை.

முதல்வர் நிறைய பொய் பேச ஆரம்பித்து விட்டார். தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒரு வருடம் பொய் பேசினார். 3 வருடம் பொய் பேசாமல் இருந்தார். இப்ப பொய் பேசுவதற்கு நேற்று துவங்கிவிட்டார். தேர்தல் வாக்குறுதியை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாத ஒரு கட்சி தி.மு.க., வெள்ளை அறிக்கை கொடுப்பதில் என்ன பிரச்னை.

வெள்ளை அறிக்கை கொடுத்தால் பிரச்னை தீர்ந்துவிடும். இதை செய்யாதவரை தி.மு.க.,வை மக்கள் நம்ப போவது கிடையாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...