திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம்

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: திருப்பரங்குன்றம் சரித்திரம் அமைச்சர் சேகர்பாவுக்கு தெரியுமா? 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. பிரிவி கவுன்சில் 1931ல், மலை கோவிலுக்கு சொந்தம் என்று தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. இதன் பிறகு பிரச்னை முடிந்தது. மலை கோவிலுக்கு தான் சொந்தம்.

ஆங்கிலேயர்கள் ஹிந்து மக்களுக்காக தற்காத்த கோவிலை, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வினர் கொடுப்பதற்கு தயாராக இருப்பது தான் வேடிக்கை. திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு பிரிவி கவுன்சில் தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும். மலை முழுமையாக கோவிலுக்கு சொந்தம் என தீர்ப்பில் உள்ளது. அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது.

போலீசார் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்தந்த ஊரில் பா.ஜ.,வினரை நீங்கள் வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். தெருவில் எங்கள் கட்சியினர் பெரியாளாகி கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.,வினரை மக்கள் நாயகர்களாக கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...