திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம்

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: திருப்பரங்குன்றம் சரித்திரம் அமைச்சர் சேகர்பாவுக்கு தெரியுமா? 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. பிரிவி கவுன்சில் 1931ல், மலை கோவிலுக்கு சொந்தம் என்று தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. இதன் பிறகு பிரச்னை முடிந்தது. மலை கோவிலுக்கு தான் சொந்தம்.

ஆங்கிலேயர்கள் ஹிந்து மக்களுக்காக தற்காத்த கோவிலை, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வினர் கொடுப்பதற்கு தயாராக இருப்பது தான் வேடிக்கை. திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு பிரிவி கவுன்சில் தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும். மலை முழுமையாக கோவிலுக்கு சொந்தம் என தீர்ப்பில் உள்ளது. அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது.

போலீசார் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்தந்த ஊரில் பா.ஜ.,வினரை நீங்கள் வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். தெருவில் எங்கள் கட்சியினர் பெரியாளாகி கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.,வினரை மக்கள் நாயகர்களாக கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.