இந்தோனேசிய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நம் நாட்டுக்கு வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.

நம் நாட்டின், 76வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டில்லியில் நடக்கும் விழாவில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கிறார்.

இதற்காக மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக, அவர் நம் நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவரது முதல் இந்திய பயணம் இது.

இந்நிலையில் டில்லியில் நேற்று, இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

‘குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது, இந்தியா – இந்தோனேஷியா இடையேயான நட்பின் பொருத்தமான கொண்டாட்டமாக இருக்கும்’ என, அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு உறவுகள் குறித்து, பிரதமர் மோடியுடன், பிரபோவோ சுபியாண்டோ இன்று பேச்சு நடத்துகிறார்.

அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என, கூறப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...