எனக்கு இந்திய டி.என்.ஏ – இந்தோனேசியா அதிபர்

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, ‘எனக்கு இந்திய டி.என்.ஏ., உள்ளது’ என பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

டில்லியில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருந்து நடந்தது. இந்தோனேசியா அதிபருக்கு மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார்.

சிறப்பு விருந்தில் சுபியாண்டோ பேசியதாவது: சில வாரங்களுக்கு முன்பு, டி.என்.ஏ., சோதனை செய்தேன். அவர்கள் என்னிடம் இந்திய டி.என்.ஏ., உள்ளது என்று சொன்னார்கள். நான் இந்திய இசையைக் கேட்டவுடன், நான் நடனமாடத் தொடங்குகிறேன். இந்தியாவும், இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றில் ஒற்றுமை உள்ளன.

எங்களிடம் நாகரீக ஒற்றுமை உள்ளன. இப்போதும் கூட நமது மொழியின் மிக முக்கியமான பகுதி சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இந்தோனேசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதம் மொழியில் உள்ளன. இது நமது பண்டைக்கால ஒற்றுமை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அவரது பேச்சு சிரிப்பலையை வரவழைத்தது. இந்த விருந்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...