ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி – அமித்ஷா

டில்லி மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

டில்லியில் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றுக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் நரேலா சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:

கெஜ்ரிவாலும், அவரது கட்சியும் டில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களை தங்கள் கருத்துகளால் அவமதித்தனர். ஆம் ஆத்மியின் கண்காணிப்பில் தலைநகரில் தவறான நிர்வாகம் நடக்கிறது.

டில்லியில் 10 ஆண்டுள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழலில் ஈடுபட்ட அதே வேளையில் ஓட்டுக்களைப் பெறுவதற்காக பொய்களைப் பரப்புகிறது. ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோத வருமானம் ஈட்டும் கட்சி என்று பொருள்.

பா.ஜ., ஆட்சிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி அன்று ஆம் ஆத்மியின் தவறான நிர்வாகம் முடிவுக்கு வரும். கெஜ்ரிவால் உங்கள் அரசாங்கம் விரைவில் வெளியேறப் போகிறது. பா.ஜ.,தலைமைக்கு வருகிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...