டில்லி மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
டில்லியில் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றுக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் நரேலா சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
கெஜ்ரிவாலும், அவரது கட்சியும் டில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களை தங்கள் கருத்துகளால் அவமதித்தனர். ஆம் ஆத்மியின் கண்காணிப்பில் தலைநகரில் தவறான நிர்வாகம் நடக்கிறது.
டில்லியில் 10 ஆண்டுள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழலில் ஈடுபட்ட அதே வேளையில் ஓட்டுக்களைப் பெறுவதற்காக பொய்களைப் பரப்புகிறது. ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோத வருமானம் ஈட்டும் கட்சி என்று பொருள்.
பா.ஜ., ஆட்சிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி அன்று ஆம் ஆத்மியின் தவறான நிர்வாகம் முடிவுக்கு வரும். கெஜ்ரிவால் உங்கள் அரசாங்கம் விரைவில் வெளியேறப் போகிறது. பா.ஜ.,தலைமைக்கு வருகிறது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |