டில்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.
கிராரி பகுதியில் தன் முதல் பேரணியில் ஆதித்யநாத் ஆற்றிய உரை:
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனையை அழுக்கு வடிகாலாக மாற்றிய பாவத்தை செய்தார்.
நேற்று (நேற்று முன்தினம்), நானும் என் அனைத்து அமைச்சர்களும் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாகராஜில் உள்ள சங்கமத்தில் புனித நீராடினோம். டில்லியில் உள்ள யமுனையில் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து குளிக்க முடியுமா என்று கெஜ்ரிவாலிடம் கேட்க விரும்புகிறேன்.
அவருக்கு ஏதாவது தார்மீக தைரியம் இருந்தால் அவர் பதிலளிக்க வேண்டும்.
சாலைகளின் மோசமான நிலை, சுகாதாரமின்மை, குடிநீர் – கழிவுநீர் பெருக்கெடுப்பு பிரச்னைகளை உருவாக்கி டில்லியை ஆம் ஆத்மி சீரழித்தது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா – காஜியாபாத் சாலைகள், டில்லியை விட மிகச் சிறந்தவை.
நுகர்வோரிடமிருந்து மூன்று மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை ஆம் ஆத்மி அரசு வசூலிக்கிறது. ஆனால் அவர்களால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியவில்லை.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |