ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை வெளியிடுவேன் – அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்தில் கைதான ஞானசேகரன் அலைபேசியில் யாரிடம் பேசினார் என்றவிபரங்கள் என்னிடம் உள்ளது. போலீஸ் வெளியிடவில்லை என்றால் நானே வெளியிடுவேன் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் அலைபேசியில் யாரிடம் பேசினார் என்ற விபரம் என்னிடம் உள்ளது.

அதை போலீசார் வெளியிட வேண்டும். இல்லையென்றால் நானே வெளியிடுவேன். அதை சட்டத்திற்கு புறம்பாகத்தான் பெற்றேன் என்பதும் தெரியும்.

இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., கசிந்தது தொடர்பாக பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை பறிமுதல் செய்ததன் மூலம் மாநில அரசின் அச்சம் வெளிப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் அவர்கள் கடமையை செய்தனர். அவர்களை கைது செய்தால் அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ., களம் இறங்கும்.

வழக்கு செலவையும் நாங்களே பார்த்துக்கொள்வோம்.

கொடியேற்றும் பிரச்னையில் பலரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தி.மு.க., கொடி கட்டி பெண்களை துரத்தியவர்களை போலீசார் கைது செய்யவில்லை.

தமிழக போலீசார் புகார் அளிப்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவம், வேங்கை வயல் விவகாரம், கிழக்கு கடற்கரை சாலை சம்பவங்களில் போலீசார் பொய்யான அறிக்கைகளையே வெளியிடுகின்றனர். சென்னையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் அங்கேயே பணியாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொய்யான அறிக்கைகளை தயார் செய்து வெளியிடுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானமும், மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களும் தான் உண்மை என்றால் அது தொடர்பான வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...