டில்லி தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் – அண்ணாமலை

புதுடில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வில் உழைப்பவர்கள் எல்லாம் பதவியை எதிர்பார்த்து உழைப்பது இல்லை. தேசத்துக்காக வேலை பார்ப்பவர்கள். 70 தொகுதிகள் டில்லியில் உள்ளது. லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரண்டும் கூட்டணியில் இருந்த போதே நாங்கள் ஜெயித்திருக்கிறோம். 7 எம்.பி.,க்களை மக்கள் தந்துள்ளனர்.

இப்போது அப்படி இல்லை. அந்த கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை. இம்முறை மெஜாரிட்டிக்கு தேவையான தொகுதிகளை வெல்வோம். ஒரு பெரிய அளவிலான வெற்றியை பா.ஜ., பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தாம் நிற்கும் தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நல்லது எதையும் கெஜ்ரிவால் 3 நாட்களாக பேசாமல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறிக் கொண்டுள்ளார்.

எப்போதும் தேர்தல் காலங்களில் முன்னே இருக்கும் அவர் சொந்த தொகுதியில் பின்தங்கி இருக்கிறார். அவரை தற்காத்துக் கொள்ளவே பா.ஜ., பணம் கொடுப்பதாக கூறி வருகிறார்.

திருப்பரங்குன்றத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களை தி.மு.க., அரசு முறைப்படுத்த வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். இப்போது தற்காலிகமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, அணையில் இருந்து வரக்கூடிய வெள்ளத்தை இரண்டு இரும்பு கேட்கள் கொண்டு தடுப்பதை போன்றது. ஒருநாள் நிச்சயம் வெடிக்கும்.வேண்டும் என்று மக்களை தூண்டுவதற்காகவே தி.மு.க., அரசாங்கம் இப்படி செய்கிறது.

இன்று (பிப்.3) காலை முதல் பா.ஜ., தலைவர்களை,தொண்டர்களை வீட்டிற்கே சென்று கைது செய்துள்ளனர். இ.சி.ஆர்., சம்பவத்தில் பல குற்றவாளிகள் இருக்கும் போது, இந்த ஒரு குற்றவாளி சினிமா ஹீரோ மாதிரி பேசும் வீடியோ மட்டும் எப்படி வெளி வருகிறது? அந்த வீடியோவில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காவல்துறை கஸ்டடியில் இருப்பவரை வீடியோ பதிவு செய்தது யார்? அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் அல்லவா? வேங்கைவயல் சம்பவத்தில் திடீரென 4 பேர் குற்றவாளிகளாக வருகின்றனர். ஆடியோ, வீடியோ வெளி வருகிறது.

இன்றைக்கு தி.மு.க., அவர்களின் அதிகாரத்தை எப்படி பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எப்படி கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதினாரோ அதே போன்று தி.மு.க.,வும் இன்றைக்கு கதை, வசனம் எழுதி மாற்ற ஆரம்பித்துவிட்டது. இது பேராபத்தில் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...