டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
வரும் 5ம் தேதி நடைபெறும் டில்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆர்.கே.புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இணைந்து செயல்படுவோம். எந்தவொரு பயனுள்ள திட்டங்களையும் ரத்து செய்ய மாட்டோம்.
டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது. இந்த அறிவிப்பை வெற்று பேச்சுக்காக அறிவிக்கவில்லை. ஆனால், ஆம்ஆத்மி குடிசை விவகாரத்தில் பொய் தகவலை பரப்புகின்றனர்.
பூர்வாஞ்சலி மற்றும் பிஹாரி சமூக மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஏனெனில், நான் பூர்வாஞ்சல் தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளேன். கோவிட் சமயத்தில் சில கட்சிகள் அவர்களை மோசமாக நடத்தினார்கள். டில்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். ஆனால், பா.ஜ., எப்போதும், பூர்வாஞ்சல் மற்றும் பிஹார் மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.
பிஹாரில் உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காக மஹானா போர்டு உருவாக்கப்பட்டது. மஹானா சாகுபடியில் தலித் குடும்பத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். எப்போது எல்லாம் தலித் மக்களுக்கான நலத்திட்டங்களை நான் அறிவிக்கிறனோ, அப்போது எல்லாம், எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |