விமான துறையில் முன்னேற்றம் – ராஜ்நாத் சிங்

”கடந்த பத்து ஆண்டுகளில் விமானத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

பெங்களூரு, ஹெச்.ஏ.,எல்.,லில் உள்ள இந்திய விமான படையின், விண்வெளி மருத்துவ நிறுவனத்தை நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இவர் முன்னிலையில், ‘ஆல்பா டோகல்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்த எல்.சி.ஏ., – எம்.கே., 1ஏ எனும் போர் விமானம் ஹெச்.ஏ.எல்., வசம் ஒப்படைக்கப்பட்டது. விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உலகம் முழுதும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் விண்வெளித்துறை மருத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் நாட்டின் விமானத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் விமான சந்தையில், நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ல் இருந்து 159 ஆக உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும்.

விண்வெளியில், வீரர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண்பதை விண்வெளி மருத்துவம் முதன்மையாக கொண்டு உள்ளது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன போர் வீமானமான ஏ.எம்.சி.ஏ.,வின் வடிவமைப்பு, மேம்படுத்துவது தொடர்பாக விண்வெளி மருத்துவ நிறுவனம் ஆலோசனை வழங்குவது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...