”இனி வரும் காலங்களில் போர் முறைகள் என்பது கணிக்க முடியாதபடியும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்”, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்தின் நவீன போர் யுத்திகள் குறித்து நாம் பேசும்போது, வரும் நாட்களில், போர் என்பது இன்னும் ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, எதிர்காலத்தின் போர் முறைகள் மாறக்கூடும்.
இதனால், இந்த பல்முனை சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும். மேலும், முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்கள் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |