தியானமும், பிரார்த்தனையும்

 தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் குறித்து விடுக்கப்படும் கோரிக்கை பிரார்த்தனை எனப்படும்.

 

குறுகிய நோக்கமில்லாது பரந்த நோக்கத்துடன் பிரார்த்தனை செய்யலாம். ஆனால், அந்நிலையில் மனமும் இறைவனும் வேறுபட்டு நிற்கும். இறைவனுக்கு எதிரில் மனம் நின்று வேண்டுவது மட்டுமே இருக்கும். தியான நிலையில் மனம் இறைவனிடம் ஒன்றி ஆன்மாவுடன் கலந்து விடுகிறது. தியானத்தில் வெற்றி கண்ட பின்பு மனம் புலன்களின் வழி திரும்பாது. பிரார்த்தனையில் வேண்டுதல் நேரம் போக, மற்ற நேரங்களில் மனம் தன்னிலையில் வேற்பட்டிருக்கும். பிரார்த்தனையில் இறைவனையும் வேராகக் கருதி, உணர்ச்சி பூர்வமாகத் துதி செய்து வேண்டுவது உண்டு. தியானம் என்பது உடல், மன நோய்களுக்கும் மருந்து. சமுதாயத்திற்குச் செல்வம் போன்றது.

மன ஒருமைப்பாடு வேறு; தியானம் வேறு. ஏதேனும் ஒருபொருளில் மனம் ஈடுபட்டு அகலாதிருப்பது ஒருமைப்பாடு. அது நல்லதாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம். வெளியுலகப் பொருட்களாகவும் இருக்கலாம். இரு இலக்கை நோக்கி வேடன் அம்பு எய்துவதற்கு இணையானது, ஒருமைப்பாடு. தியானம் அந்நிலையை விடச் சிறந்தது. வெளிப்பொருள்களை நோக்கி, உள்முகமாக மனம் செல்வது தியானம். மனதின் மூலம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்து கொள்வது தியானம்.

குழந்தை மீரா தன் தாத்தாவைப் பார்த்து, பிரார்த்தனை என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? என்று கேட்டது. இந்த இரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கூறினார் அந்த தாத்தா.

"நாம் கடவுளுடன் பேசுவது பிரார்த்தனை. கடவுள் நம்முடன் உரையாடுவது தியானம்". நாம் இறைவனுடன் வலியப் பொய் உரையாடுவதில் பிணைப்பு அவ்வளவாக உறுதியாக இருக்காது. ஏனென்றால், பல விஷயங்களில் ஈடுபட்ட மனம் அவ்வளவு எளிதில் அவற்றை உதறிவிடாது. இறைவனே நம்மை தன் பக்கம் அழைத்துக் கொள்ளும் போது, உலக ஸம்ஸ்காரங்கலாகிய தளைகள் தாமாகவே அகன்று விடுகின்றன.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...