தியானமும், பிரார்த்தனையும்

 தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் குறித்து விடுக்கப்படும் கோரிக்கை பிரார்த்தனை எனப்படும்.

 

குறுகிய நோக்கமில்லாது பரந்த நோக்கத்துடன் பிரார்த்தனை செய்யலாம். ஆனால், அந்நிலையில் மனமும் இறைவனும் வேறுபட்டு நிற்கும். இறைவனுக்கு எதிரில் மனம் நின்று வேண்டுவது மட்டுமே இருக்கும். தியான நிலையில் மனம் இறைவனிடம் ஒன்றி ஆன்மாவுடன் கலந்து விடுகிறது. தியானத்தில் வெற்றி கண்ட பின்பு மனம் புலன்களின் வழி திரும்பாது. பிரார்த்தனையில் வேண்டுதல் நேரம் போக, மற்ற நேரங்களில் மனம் தன்னிலையில் வேற்பட்டிருக்கும். பிரார்த்தனையில் இறைவனையும் வேராகக் கருதி, உணர்ச்சி பூர்வமாகத் துதி செய்து வேண்டுவது உண்டு. தியானம் என்பது உடல், மன நோய்களுக்கும் மருந்து. சமுதாயத்திற்குச் செல்வம் போன்றது.

மன ஒருமைப்பாடு வேறு; தியானம் வேறு. ஏதேனும் ஒருபொருளில் மனம் ஈடுபட்டு அகலாதிருப்பது ஒருமைப்பாடு. அது நல்லதாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம். வெளியுலகப் பொருட்களாகவும் இருக்கலாம். இரு இலக்கை நோக்கி வேடன் அம்பு எய்துவதற்கு இணையானது, ஒருமைப்பாடு. தியானம் அந்நிலையை விடச் சிறந்தது. வெளிப்பொருள்களை நோக்கி, உள்முகமாக மனம் செல்வது தியானம். மனதின் மூலம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்து கொள்வது தியானம்.

குழந்தை மீரா தன் தாத்தாவைப் பார்த்து, பிரார்த்தனை என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? என்று கேட்டது. இந்த இரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கூறினார் அந்த தாத்தா.

"நாம் கடவுளுடன் பேசுவது பிரார்த்தனை. கடவுள் நம்முடன் உரையாடுவது தியானம்". நாம் இறைவனுடன் வலியப் பொய் உரையாடுவதில் பிணைப்பு அவ்வளவாக உறுதியாக இருக்காது. ஏனென்றால், பல விஷயங்களில் ஈடுபட்ட மனம் அவ்வளவு எளிதில் அவற்றை உதறிவிடாது. இறைவனே நம்மை தன் பக்கம் அழைத்துக் கொள்ளும் போது, உலக ஸம்ஸ்காரங்கலாகிய தளைகள் தாமாகவே அகன்று விடுகின்றன.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...