தியானமும், பிரார்த்தனையும்

 தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் குறித்து விடுக்கப்படும் கோரிக்கை பிரார்த்தனை எனப்படும்.

 

குறுகிய நோக்கமில்லாது பரந்த நோக்கத்துடன் பிரார்த்தனை செய்யலாம். ஆனால், அந்நிலையில் மனமும் இறைவனும் வேறுபட்டு நிற்கும். இறைவனுக்கு எதிரில் மனம் நின்று வேண்டுவது மட்டுமே இருக்கும். தியான நிலையில் மனம் இறைவனிடம் ஒன்றி ஆன்மாவுடன் கலந்து விடுகிறது. தியானத்தில் வெற்றி கண்ட பின்பு மனம் புலன்களின் வழி திரும்பாது. பிரார்த்தனையில் வேண்டுதல் நேரம் போக, மற்ற நேரங்களில் மனம் தன்னிலையில் வேற்பட்டிருக்கும். பிரார்த்தனையில் இறைவனையும் வேராகக் கருதி, உணர்ச்சி பூர்வமாகத் துதி செய்து வேண்டுவது உண்டு. தியானம் என்பது உடல், மன நோய்களுக்கும் மருந்து. சமுதாயத்திற்குச் செல்வம் போன்றது.

மன ஒருமைப்பாடு வேறு; தியானம் வேறு. ஏதேனும் ஒருபொருளில் மனம் ஈடுபட்டு அகலாதிருப்பது ஒருமைப்பாடு. அது நல்லதாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம். வெளியுலகப் பொருட்களாகவும் இருக்கலாம். இரு இலக்கை நோக்கி வேடன் அம்பு எய்துவதற்கு இணையானது, ஒருமைப்பாடு. தியானம் அந்நிலையை விடச் சிறந்தது. வெளிப்பொருள்களை நோக்கி, உள்முகமாக மனம் செல்வது தியானம். மனதின் மூலம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்து கொள்வது தியானம்.

குழந்தை மீரா தன் தாத்தாவைப் பார்த்து, பிரார்த்தனை என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? என்று கேட்டது. இந்த இரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கூறினார் அந்த தாத்தா.

"நாம் கடவுளுடன் பேசுவது பிரார்த்தனை. கடவுள் நம்முடன் உரையாடுவது தியானம்". நாம் இறைவனுடன் வலியப் பொய் உரையாடுவதில் பிணைப்பு அவ்வளவாக உறுதியாக இருக்காது. ஏனென்றால், பல விஷயங்களில் ஈடுபட்ட மனம் அவ்வளவு எளிதில் அவற்றை உதறிவிடாது. இறைவனே நம்மை தன் பக்கம் அழைத்துக் கொள்ளும் போது, உலக ஸம்ஸ்காரங்கலாகிய தளைகள் தாமாகவே அகன்று விடுகின்றன.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...