கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம்

ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு அபாயம் தொடர்பான கவலை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கேம்கள் மீதான பிடியை அரசு மேலும் இறுக்கமாக்கியுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் 2022 முதல் 2024 ஆகிய காலகட்டத்தில், 1298 ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங், கேமிங் இணையதளங்களை முடக்க உத்தரவு பிறப்பித்ததாக பத்திரிகை தகவல் அமைப்பு, பிஐபி தெரிவிக்கிறது.

“ஆன்லைன் கேமிங் தொடர்பான இடர்களையும், அடிமையாக்கும் தன்மை போன்ற ஆபத்துகளை அரசு அறிந்திருக்கிறது,” என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் மக்கள் அவையில் தெரிவித்தார்.

கேமிங் மேடைகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான நெறிமுறைகள் கொண்ட தகவல் தொழில்நுட்ப (இடைப்பட்ட நிறுவனங்கள் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக அறம்) விதிகள், 2021ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மேடைகள், சட்டவிரோதமான உள்ளடக்கத்தை குறிப்பாக, சூதாட்டம், பண மோசடி அல்லது சிறார்களுக்கு பாதிப்பான உள்ளடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

2022 – 2024 காலத்தில், ஆன்லைன் சூதாட்டம், கேமிங்க், பெட்டிங் தொடர்பான 692 தளங்கள் மற்றும் செயலிகள் முடக்கப்பட உத்தரவிடப்பட்டதாக, டிசம்பர் மாதம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களைவையில் தெரிவித்திருந்தார். ஜிஎஸ்டி இயக்குனரகம், ஜிஎஸ்டி செலுத்தாமல் ஏமாற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மற்றும் செயலிகளை முடக்கலாம், என நிதி அமைச்சகம் ஜனவரி மாதம் அனுமதி அளித்தது. வரி ஏய்ப்பை தடுக்கவும், டிஜிட்டல் கேமிங் துறையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசின் டிஜிட்டல் கட்டுப்பாடு முயற்சிகள் கேமிங் துறையோடு நின்றுவிடவில்லை. ஆன்லைன் ஆபாசம், குறிப்பாக மைனர்கள் தொடர்பான உள்ளடக்கம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் வைஷ்ணவ் எழுத்து மூலமான பதிலில் தெரிவித்தார்.

ஆபாசமான மற்றும் பாலியல் தூண்டுதல் உள்ளடக்கத்தை வெளியிட்டால், ஐடி சட்டம் கடுமையான தண்டனை விதிக்க வழி செய்கிறது. மேலும், 2021 விதிகள், மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் தொடர்பாக இடைப்பட்ட நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என எச்சரிக்கிறது. வல்லுறவு, சிறார் பாலியல் தாக்குதல், பாலியல் தூண்டும் உள்ளடக்கம் தொடர்பான குற்றங்களில் செய்தியை முதலில் பகிர்ந்தவரை சமூக ஊடக மேடைகள் அடையாளம் காட்ட வேண்டும். மேலும், தனியுரிமை மீறும் அல்லது பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தை இந்த மேடைகள் 24மணி நேரத்தில் அகற்ற வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...