இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா

” இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,” என குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா – 2025 மசோதா மீதான விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் வருகையை நிர்வகிக்க, பாஸ்போர்ட் சட்டம் – 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் – 1939, வெளிநாட்டினர் சட்டம் – 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, நான்கு விதமான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து, சமீபத்தில் லோக்சபாவில், குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா – 2025ஐ தாக்கல் செய்தது.

லோக்சபாவில் இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சுற்றுலா, கல்வி சுகாதாரம் மற்றும் வணிகத்திற்காக இந்தியா வருபவர்களை வரவேற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளபவர்களை கடினமாக கையாள்வோம்.நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக வருபவர்களை எப்போதும் வரவேற்போம்.

இந்த மசோதா, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும். சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு ஆதரவாக இருக்கும். இந்த மசோதா, இந்தியா வருபவர்களின் அனைத்து தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதனைத் தொடர்ந்து குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா -2025 லோக்சபாவில் நிறைவேறியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...