காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை : நெகிழ்ச்சி சம்பவம்

ஓமனுக்கு அருகே காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படையினர் அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஈரானுக்கு செல்லும் வழியில் அவர் மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டார்.

இந்த தகவல் இந்திய கடற்படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, ஐ.என்.எஸ்., திரிகண்ட் போர்க் கப்பலில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஈரான் மீன்பிடி படகில் 11 பாகிஸ்தானியர்கள், 5 ஈரானியர்கள் இருந்தனர். காயமடைந்த நபர் பாகிஸ்தானை (பலூச்) சேர்ந்தவர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.

திரிகண்ட் கப்பலில் இருந்த மருத்துவ அதிகாரி மார்கோஸ், காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு சிகிச்சை அளித்தார். மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டார். இந்த சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

ஈரானை அடையும் வரை அவருக்கு தேவையான மருத்துவ பொருட்களும் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கியதற்காக படகில் இருந்த குழுவினர் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...