காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை : நெகிழ்ச்சி சம்பவம்

ஓமனுக்கு அருகே காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படையினர் அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஈரானுக்கு செல்லும் வழியில் அவர் மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டார்.

இந்த தகவல் இந்திய கடற்படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, ஐ.என்.எஸ்., திரிகண்ட் போர்க் கப்பலில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஈரான் மீன்பிடி படகில் 11 பாகிஸ்தானியர்கள், 5 ஈரானியர்கள் இருந்தனர். காயமடைந்த நபர் பாகிஸ்தானை (பலூச்) சேர்ந்தவர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.

திரிகண்ட் கப்பலில் இருந்த மருத்துவ அதிகாரி மார்கோஸ், காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு சிகிச்சை அளித்தார். மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டார். இந்த சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

ஈரானை அடையும் வரை அவருக்கு தேவையான மருத்துவ பொருட்களும் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கியதற்காக படகில் இருந்த குழுவினர் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி ...

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்� ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான� ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ள� ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் ''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...