யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ‘இது பெருமைமிக்க தருணம்’ என, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதற்காக, ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் சார்பில், சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.

இதில், ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் அவற்றின் நெறிமுறைகள், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய, ‘விண்ட்ஹோக்’ பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்தாண்டு, ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக -லோகனா ஆகிய மூன்று இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய — பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப் பட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், புதிதாக 74 ஆவணங்கள் கடந்த 16ம் தேதி சேர்க்கப்பட்டு உள்ளன.

ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை இதில் அடங்கும்.

இதன் வாயிலாக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அறிவிப்பை தன் சமூக வலைதள பக்கத்தில் வரவேற்று பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்.

‘காலத்தால் அழியாத நம் ஞானத்திற்கும், வளமான கலாசாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம்.

‘கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நுாற்றாண்டுகளாக நாகரிகத்தையும், உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறன் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது’ என, கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...