நாயுருவியின் மருத்துவக் குணம்

 இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை செய்யும். இதன் குணம் இதன் வேரினால் வசிய முண்டாகும். இலை – இரத்தமூலம், அதிசாரம், கபநோய், வியர்வை, தந்திப் பிரமேகம் இவைகளைப் போக்கும். அரிசி என்கிற இதன்விதை பசியைப் போக்கும் சமூல சாம்பல் பிரசிவித்த மாதர் உதிரசிக்கலை ஒழிக்கும். வங்கத்தைச் செந்தூரமாக்கும்.

 

செந்நாயுருவி இதனால், வீக்கம், பாண்டு, காமாலை, இவை நீங்கும். மாதர்களின் ருதுகாலத்தில் மாதர்களின் சோணிதத்தை வழக்கப்படி உண்டாக்கும்.

இலைக் கற்பமும், வெல்லமும் சேர்த்து அல்லது இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்தரைத்துச் சுரத்துக்குக் கொடுக்கலாம். இலையை நீர் விட்டரைத்துச் சிறுகடி விடங்களுக்குப் பூசலாம். இலைச்சாற்றை வெய்யிலில் வைத்து வற்றவைத்து மெழுகு பதமாக்கி அத்துடன் சிறிது அபின் சேர்த்துக் கொறுக்கு புண்ணிற்குப் போடச் சுகமாகும்.

நாயுருவி சாம்பல் தெளிநீர் 41/2 லிட்டர் நாயுருவி சாம்பல் ¼ லிட்டர் நல்லெண்ணெய் 1 ½ லிட்டர் இவைகளைச் சேர்த்துக் காய்ச்சிப் பக்குவத்தில் வடித்துக் கொள்ளவும் இத்தைலத்தை, காது செவிடு, காதுசீழ் முதலியவைகளை நீக்கும்.

வேர்ச்சாம்பல் 5 குன்றியிடை வெல்லத்தில் கொடுக்கச் சுகப் பிரசவமுண்டாகும். பச்சை வேரால் பல்துலக்கு வர பல் அழுக்குகள் நீங்கி முகவசீகர முண்டாகும். புண்களை அறுத்துக் குணப்படுத்த இதன் சாம்பல் ஊன் பூச்சுத் தைலத்தில் சேரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...