இந்தியாவின் முயற்சியால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடை: மத்திய அரசு

இந்தியா எடுத்து வரும் தொடர் முயற்சி காரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பல பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடை விதித்துள்ளது,” என மத்திய அரசு பார்லிமென்டில் தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தொடர் முயற்சி காரணமாக தான், சர்வதேச சமூகமானது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த நமது கவலையை புரிந்து கொண்டுள்ளன. இந்தியாவின் தாடர் முயற்சியால், பாகிஸ்தானை சேர்ந்த பல பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது. பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பும், பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்து இருந்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா., பாதுகாப்பு சபை, அதற்கு காரணமான பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையை பல உலக தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...