வெள்ளத்தில் தத்தளிக்கும் பஞ்சாப்: செப்.9ல் நேரில் ஆய்வு செய்கிறார் மோடி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபுக்கு செப்.9ம் தேதி பிரதமர் மோடி செல்கிறார்.

வட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாய், டில்லி என கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இறங்கி உள்ளது. மாநில அரசுக்கு உதவியாக, ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களை காக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஏற்கனவே பஞ்சாப் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி கூறியிருந்தார்.

இந்நிலையில், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செப்.9ம் தேதி செல்கிறார். அங்கு செல்லும் அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

இந்த அறிவிப்பை பஞ்சாப் மாநில பாஜ தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;செப்.9ம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு பிரதமர் மோடி வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரடியாக சந்திக்கிறார். அவர்களின் துயரங்களைக் கேட்கும் பிரதமர் மோடி, உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.

பிரதமர் மோடியின் பயணம் என்பது, மத்தியில் ஆளும் பாஜ அரசு எப்போதும் பஞ்சாப் மக்களின் துயரங்களுக்கு துணை நிற்கிறது, கடினமான நேரத்தில் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கும் என்பதை காட்டுகிறது.

இவ்வாறு பாஜ தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...