பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், கூடியிருந்தோர் அனைவருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பூர்ணியா என்பது மா பூரண் தேவி, பக்த பிரஹ்லாத் மற்றும் மகரிஷி மெஹி பாபாவின் பூமி என்று அவர் குறிப்பிட்டார். இந்த மண் பனீஷ்வர்நாத் ரேணு மற்றும் சதிநாத் பாதுரி போன்ற இலக்கிய மேதைகளை கண்டுள்ளது என்று திரு மோடி எடுத்துரைத்தார். வினோபா பாவே போன்ற அர்ப்பணிப்புள்ள கர்மயோகிகளின் கர்மபூமி இது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த பூமியின் மீதான தமது ஆழ்ந்த மரியாதையை மீண்டும் வெளிப்படுத்தினார்.

பீகாரில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டப்படுவதாக அறிவித்த திரு மோடி, ரயில்வே, விமான நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட இந்தத் திட்டங்கள் சீமாஞ்சலின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வழியாக செயல்படும் என்பதை எடுத்துரைத்தார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 40,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். இது, இந்த 40,000 குடும்பங்களின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். தந்தேராஸ், தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் நிரந்தர வீட்டில் நுழைவது ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அனைத்து குடும்பங்களுக்கும் அவர் தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

வீடற்ற சகோதர சகோதரிகளுக்கு ஒரு நாள் நிரந்தர வீடு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதே இன்றைய நிகழ்ச்சியாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில், ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகளை அரசு கட்டி வழங்கியுள்ளது என்று கூறினார். அரசு தற்போது 3 கோடி புதிய வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார். ஒவ்வொரு ஏழைக் குடிமகனுக்கும் நிரந்தர வீடு கிடைக்கும் வரை, மோடி ஓயமாட்டேன் என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். விளிம்புநிலை மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஏழைகளுக்கு சேவை செய்வதும் தமது ஆட்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் எடுத்துரைத்தார்.

பொறியாளர்கள் தினமான இன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். பொறியாளர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் இன்றைய நிகழ்விலும் தெளிவாகத் தெரிகிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார். பூர்ணியா விமான நிலையத்தின் முனையக் கட்டிடம் ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்தில் கட்டப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்த முனையம் திறக்கப்படுவதை அறிவித்து முதல் வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய விமான நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், பூர்ணியா தற்போது நாட்டின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது என்று பிரதமர் கூறினார். இது பூர்ணியா மற்றும் சீமாஞ்சல் இடையே நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய வணிக மையங்களுடன் நேரடி போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...