ஜியோர்ஜியா மெலோனியின் ‘மன் கி பாத்’… இத்தாலிய பிரதமரின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதிய மோடி

இத்தாலிய பிரதமரின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் பேசியுள்ளார்.

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான, “நான் ஜார்ஜியா – என் வேர்கள், என் கொள்கைகள்” (I am Giorgia — My Roots, My Principles) புத்தகத்தின் இந்தியப் பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

மோடி தனது முன்னுரையில், மெலோனியின் இந்த சுயசரிதை அவருடைய ’மன் கி பாத்’ (மனதின் குரல்) என்று வர்ணித்துள்ளார். மேலும், மெலோனியின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மெலோனியை ஒரு “தேசபக்தர் மற்றும் சிறந்த சமகாலத் தலைவர்” என்றும் மோடி புகழ்ந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தான் பல உலகத் தலைவர்களுடன் உரையாடியதாகவும், அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தனிப்பட்ட கதைகளைத் தாண்டி, ஒரு பெரிய விஷயத்தைக் குறிப்பதாகவும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

பிரதமர் மெலோனியின் வாழ்க்கையும், அவருடைய தலைமைப் பண்பும் இந்த உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறது. சிறந்த சமகால அரசியல் தலைவர் மற்றும் ஒரு தேசபக்தரின் புத்துணர்ச்சியூட்டும் கதையாக இது இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும்.

உலகத்துடன் சம அளவில் தொடர்புகொள்ளும் அதே வேளையில், ஒருவரின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மெலோனின் கொண்டுள்ள நம்பிக்கை, நமது சொந்த விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது,” என்று மோடி தனது முன்னுரையில் எழுதியுள்ளார்.

பிரதமர் மெலோனியின் இந்தப் புத்தகம் கடந்த 2021-ஆம் ஆண்டு அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இத்தாலியில் எழுதப்பட்டு அதிக விற்பனையான புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் அமெரிக்கப் பதிப்பு 2025 ஜூன் மாதம், அமெரிக்க அதிபரின் மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் சிறு முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.

மெலோனின் தான் ஒரு பெண், திருமணமாகாத தாய், மேலும் கர்ப்பமாக இருக்கும்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கவில்லை என்பதால், தனக்கு எதிராக நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் பற்றிய நிகழ்வுகளை தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

“ஒரு பெண், பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவானது. என்னைப் போன்ற ஒருவரை, குழந்தை பிறக்கப் போகிறது என்பதால் ஒதுங்கிச் செல்லச் சொன்னால், தற்காலிக வேலை பார்க்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?

குழந்தைகள் ஒரு குறைபாடு அல்ல என்பதை நான் நிரூபிக்க விரும்பினேன்” என்று மெலோனின் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...