ஆசியான் மாநாடு காணொளிகாட்சி மூலம் கலந்து கொள்ளும் மோடி

மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசியான்மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளிகாட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் ஆசியான் உச்ச நிலை மாநாடு நடைபெறவுள்ளது.

அதில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டிசில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், தீபாவளித் திருநாள் காரணமாக மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில்கலந்துகொள்ள முடியவில்லை என ஆசியான் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியா கூறியுள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி அக்டோபர் 24ம் தேதி தொடங்கவுள்ளதால் ஆசியான் மாநாட்டில் நேரில்பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா – அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்றுவரும் சூழலில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை குறைத்துகொள்ளப் போவதாகப் பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்புடன் கூடுதல் வரிவிதிப்பு குறித்தும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றியும் மோடி பேசியதை இந்திய அரசு உறுதிப்படுத்த வில்லை .

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மலேசிய பயணத்தை மோடி தவிர்த்திருக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒருநாட்டுடன் வர்த்தக பேச்சு வார்த்தை முடிவடைந்த பிறகுதான், தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொள்வது இந்தியாவின் வழக்கம் .

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றபிறகு, 2022ஆம் ஆண்டைத்தவிர அனைத்து ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்த முறை ஆசியான் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்விலும் மோடிக்கு அழைப்பு விடுக்கபட்டது.

அந்த அமைதிமாநாடு டிரம்ப் தலைமையில் நடைபெற்றதால், மோடி நேரில்செல்வதை தவிர்த்து, வெளியுறவுத் துறை இணையமைச்சரை அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிட தக்கது.

இதற்கிடையே, டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கவே மலேசிய பயணத்தை மோடி தவிர்த்ததாக காங்கிரஸ் சாடியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...