2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ஒலிம்பிக்நிறைவு விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நான் தண்டேஸ்வரியின் பூமிக்கு வந்திருக்கும் போது, அன்னையின் முன் ஒரே ஒருபிரார்த்தனை மட்டுமே உள்ளது. அவரது ஆசீர்வாதத்தால், சத்தீஸ்கர் நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, வளமாகவேண்டும்.
நக்சலிசத்தால் யாரும் பயனடைய வில்லை. அமைதி மட் டுமே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத் திலிருந்து விடுபடும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முழு இந்தியாவையும் நக்சலிசத்திலிருந்து விடுவிக்க உறுதிப் பூண்டுள்ளது.
நான் இன்று பஸ்தாருக்கு வந்துள்ளேன், மிகுந்தமகிழ்ச்சியை உணர்கிறேன்.கான்கர், கொண்டகான், பஸ்தார், சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா ஆகிய 7 மாவட்டங்கள் 2030க்குள் நாட்டின் மிகவும் வளர்ந்தபழங்குடி மாவட்டமாக இருக்கும் என்பதை இன்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |