முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ஆகும். பசியைத் தூண்டும். முள்ளங்கி ஆஷ்துமாவைக் குணப்படுத்துகிறது. மூலம், இருமல், கண்நோய்கள், வாயுப் பிரச்சினை, குரல் கோளாறுகள் ஆகியவற்றை மருத்துரீதியாக குணப்படுத்தும். தைராய்டு சுரப்பிக்கு, முள்ளங்கியிலுள்ள ஆர்சனிக் நல்ல உதவியாக இருக்கிறது.
சிறுநீரகத்தில் எரியும் உணர்வு மற்றும் சிறுநீர்த் தாரை சிக்கல்களை முள்ளங்கி குணப்படுத்துகிறது. முள்ளங்கி இலையின் சாறு, கர்ப்பத் தொடர்பான சிக்கல்களுக்கும், பித்த நீர் கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. இதயத்தையும், கல்லீரலையும் வலுப்படுத்தும், சளிச் சவ்வுப் படலத்திற்கு நன்மை புரியும். வயிற்றில் எரிச்சலுக்கு முள்ளங்கியைச் சாப்பிடலாம்.
முள்ளங்கி இலையின் சாறு நீரிளக்கி, பித்தம், கபம், வாயுவை முள்ளங்கி கட்டுப்படுத்துகிறது.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.