வங்கப்பிரிவினையும் வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய்! என்ற முழக்கமும்

வங்கப்பிரிவினையும் வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய்! என்ற முழக்கமும் ஒன்றுபட்ட வங்காளம் ஒரு மகத்தான சக்தி, பிளவுபட்ட வங்காளம் பல பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவும் வங்காளத்தை மூலைக்கொன்றாக இழுத்து செல்ல முனையும். ஒன்றுபட்டு ஒரே சக்தியாக விளங்கும் வங்கமக்கள் நமக்கு பலமான எதிரிகளாக விளங்கு கின்றனர்.  அவர்களைப் பிரித்து பலவீனப் படுத்துவதே எனது முக்கிய நோக்கம் என்று கூறி 1905 ஆம் ஆண்டு இந்திய வைசிராயாக நியமிக்கப்பட்ட கர்ஸான் வயலி வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான்,

வங்காளம் என்பது அன்று மிகப்பெரிய மாநிலம், அதாவது அன்றைய பெங்கால் பிரசிடன்ஸி என்பது இன்றைய பங்களாதேஷ், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மற்றும் பிகாரின் சில பகுதிகள், ஆகியன சேர்ந்த ஒன்றாகும்,

இந்தக் காலகட்டங்களில் சகோதரி நிவேதிதா, ராமகிருஷ்ண மிஷன் இல் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்தாள். வங்க மக்களிடம் சென்று, சகோதர சகோதரிகளே பிரிட்டிஷ்காரர்களை கண்டால், “வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய்,! “என்று உரக்கக் கோஷமிடுங்கள் இந்தக் கோஷத்திற்கு அவர்கள் நிச்சயம் கதிகலங்கி போய் விடுவார்கள் என்று கூறினாள்,

பங்கிம் சந்திர சாட்டர்ஜி அருளிய வந்தேமாதரம் இந்த  சகோதரி நிவேதிதா வங்கப் பிரிவினை நடந்த காலகட்டங்களில் ஒரு மாபெரும் போர்ப் பரணி கீதமாக மாறியது,

பின்னர் சகோதரி நிவேதிதா நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டாள், பரோடாவில் பேராசிரியராக பணி புரிந்து வந்த அரவிந்தரை சந்தித்து ” அரவிந்தரே இன்றையதினம் பரோடாவில் உங்களுக்கு என்ன வேலை? நீங்கள் உடனடியாக வங்காளத்திற்கு செல்லுங்கள், என உத்தரவிட்டாள்,

அரவிந்தர் மறுப்பேதும் பேசாமல் தனது வேலையினை ராஜினாமா செய்துவிட்டு வங்காளத்திற்கு சென்று சுதந்திர போராட்டத்தில் குதித்தார்,

விபின் சந்திர பாலை சந்தித்து ” நீங்கள் உடனடியாக வந்தேமாதரம் எனும் பெயரில் பத்திரிகை ஒன்றினை நடத்தவேண்டும் என கேட்டுக் கொண்டாள்,

அவரும் அதற்கு உகந்து வந்தேமாதரம் என்னும் பத்திரிகையை அரவிந்தர் உதவியுடன் நடத்த முன் வந்தார்,

வந்தேமாதரம் பத்திரிகையில் தினசரி வரும் கட்டுரைகள் மக்கள் மத்தியில் தீப்பிழம்பாக கொதித்தது, மக்கள் எங்கு பார்த்தாலும் வந்தேமாதரம்! வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய், என்று முழக்கமிட்டார்கள்,

இவ்வாறு வந்தேமாதரம் எனும் தாரக மந்திரம் வங்கப்பிரிவினையின் போது நாடெங்கிலும் , நாடு முழுக்க ஒரு மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது,

நன்றி ; ராம் குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...