ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் – பிரதமர் குடியரசு தலைவர் மரியாதை

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106-வது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதரமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 106-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், “ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த சம்பவம் நம்முடைய சுதந்திரப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது. இந்திய மக்கள் அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், “ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இது நமது இந்திய வரலாற்றின் கருப்பு அத்தியாயம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இது திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீர மரணம் அடைந்தவர்களின் வெல்ல முடியாத உணர்வை வரும் தலைமுறையினர் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்” என கூறியுள்ளார்.

இதுபோல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தி உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.