இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்துசெய்ய வேண்டும் ஸ்ரீராம் சேனா

 இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியை ரத்துசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம் என ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட்போட்டி வருகிற 25ம்தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது . இதை உடனே ரத்துசெய்ய வேண்டும். இல்லை எனில் நாங்கள் மிகதீவிரமாக போராட்டம் நடத்துவோம்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் இந்தியாவில் இருக்கும் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானை நம்மண்ணில் கிரிக்கெட் விளையாட வாய்ப்புவழங்குவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இந்திய பொருளாதாத்துக்கும் , பாதுகாப்புக்கும் பாதிப்பை உருவாக்கும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகிறது. கிரிக்கெட் போட்டியை காண அந்நாட்டை சேர்ந்த 3,000 பேருக்கு விசாவழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது . அவர்கள் மூலம் கள்ள நோட்டு, போதைப்பொருள், கறுப்புபணம் போன்றவற்றை நம் நாட்டில் புழக்கத்தில்விட்டு விடுவார்கள். எனவே, இந்த போட்டியை ரத்துசெய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...