இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்துசெய்ய வேண்டும் ஸ்ரீராம் சேனா

 இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியை ரத்துசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம் என ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட்போட்டி வருகிற 25ம்தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது . இதை உடனே ரத்துசெய்ய வேண்டும். இல்லை எனில் நாங்கள் மிகதீவிரமாக போராட்டம் நடத்துவோம்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் இந்தியாவில் இருக்கும் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானை நம்மண்ணில் கிரிக்கெட் விளையாட வாய்ப்புவழங்குவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இந்திய பொருளாதாத்துக்கும் , பாதுகாப்புக்கும் பாதிப்பை உருவாக்கும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகிறது. கிரிக்கெட் போட்டியை காண அந்நாட்டை சேர்ந்த 3,000 பேருக்கு விசாவழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது . அவர்கள் மூலம் கள்ள நோட்டு, போதைப்பொருள், கறுப்புபணம் போன்றவற்றை நம் நாட்டில் புழக்கத்தில்விட்டு விடுவார்கள். எனவே, இந்த போட்டியை ரத்துசெய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...