தேசியக் கொடி அவமதிப்பு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு செல்ல அனுமதிமறுக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி அகமதாபத்தில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான் அவுட்ஆகி பெவிலியன் திரும்பும் போது இந்திய ரசிகர்கள் சிலர் அவரை ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய விமர்சனத்திற்கு உள்ளானது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இந்திய ரசிகர்களின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விமர்சனத்தை முன்வைத்தனர்.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டபதிவில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேசியக்கொடி எடுத்துச்செல்ல: விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கவேண்டும். வெறுப்பை பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று சாடியிருந்தார். இந்த நிலையில், தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய தேசியக் கொடியை எடுத்து செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூவர்ணகொடியை அவமதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம்எழுப்பியதில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை மறந்துவிட்டார்.

திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கதலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமனி, தேசியகொடியை அவமதித்து தனது அரசியல் பிரசாரத்தை மேலும் ஒருபடி மேலே எடுத்து சென்றுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காணசெல்லும் ரசிகர்கள் கையில் இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல மைதானத்திற்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்தஅதிகாரத்தை கொடுத்தது யார்? இந்திய தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு மக்களிடம் திமுகவும் மன்னிப்பு கேட்கவேண்டும். தவறினால் மூவர்ண கொடியின் கண்ணியத்தை காக்கதவறிய திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தித்திற்கு பாஜக தள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...