டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்றது

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்குக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் டெங்கு நிலவரம் குறித்தும், நோய் தடுப்பு, கட்டுப்பாடு, மேலாண்மைக்கான தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்வதற்காக புதுதில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் டெங்கு நிலைமை குறித்தும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தயார்நிலை குறித்தும் அமைச்சருக்கு விளக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சரியான நேரத்தில் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் காரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு விகிதம் இந்த ஆண்டில் 0.1 சதவீதமாக குறைந்துள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டினார். டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். டெங்குவுக்கு எதிரான தடுப்பு, கட்டுப்பாடு, நோய் மேலாண்மை நடவடிக்கைகளை முடுக்கி விடவும் வலுப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நோய்ப்பரவல் அதிகமாகப்பதிவாகும் மாநிலங்களில் தீவிரக்கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு திரு ஜே பி நட்டா வலியுறுத்தினார். டெங்கு தடுப்பு தொடர்பாக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

டெங்கு நோய் தடுப்பு, நோய் அறிகுறிகள், சிகிச்சை நடைமுறைகள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, டெங்கு தடுப்பு, விழிப்புணர்வுக்காக 24 மணி நேரமும் செயல்படும்  உதவி தொலைபேசி  எண்ணை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...