சபரிமலைக்கு அருகில்102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்

சபரிமலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்,50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த விபத்தில் சிக்கினர்.

விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இடுக்கி மாவட்டத்தில்: கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது.

வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யாத்ரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டதாம். அதை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாம். ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.

ஆம்புலன்ஸ்கள் போக முடியவில்லை: மிகவும் குறுகலான பாதை என்பதால் ஆம்புலன்ஸ்களோ வேன்களோ செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 70 சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. செல்போன்களும் ஓலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வண்டிப்பெரியாறு போலீஸôர் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும், பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.

நெரிசலில் இறந்ததாக ஒரு வட்டாரமும், வாகனம் ஏறியதால் நசுங்கி இறந்ததாக மற்றொரு வட்டாரமும் தெரிவிக்கிறது.

சோகம் கப்பியது: பொங்கல் விழாவில் பங்கேற்க வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள்தான் பெரும்பாலும் இறந்தனர் என்று தெரிகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் இந்த விபத்து குறித்த செய்தி பரவியதும் சோகம் கப்பியது.

{qtube vid:=rQL_qsFy_yg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...