சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு

சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த சொர்ணலதா, மதுரையை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த சொர்ணலதா, மதுரையை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகள் வழங்கப்படும். சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கடந்த 33 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு உதவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

கோவையை சேர்ந்த சொர்ணலதா, நரம்புத்தசை கோளாறுகள் மற்றும் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளார். மதுரையை சேர்ந்த ராஜ்குமார் வீதிகளில் வாழும் முதியோர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமற்ற முறையில் சேவை செய்து வருகிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்படும். இந்த தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வை பரப்புதல், நீர்நிலைகள் மேலாண்மை, பசுமையாக்கம், கழிவு மேலாண்மை போன்றவற்றில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

சமூக சேவை விருதிற்கு தலா ரூ.2 லட்சமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதிற்கு ரூ.5 லட்சமும் விருது தொகை வழங்கப்படும். சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு வரும் ஜனவரி 26ம் தேதி, சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...