விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் தாசில்தார் படுகாயம்

 திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் தாசில்தார் படுகாயம் அடைந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் 56 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்றுமுன்தினம் மாலை ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலம் வத்தலக் குண்டு பஸ்நிலையத்தை கடந்து பெரியபள்ளிவாசல் பகுதி அருகே சென்றகொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்மகும்பல் சிலைகளை நோக்கி கல்வீசியது.

இந்த கல்வீச்சில் அந்தவழியாக சென்ற 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் ஊர்வல பாதுகாப்புபணிகளை மேற்கொள்ள வந்த நிலக்கோட்டை தாசில்தார் சங்கர நாராயணனுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அந்தப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக போலீசார் தடியடிநடத்தி, கூட்டத்தினரைக் கலைத்தனர். இதையடுத்து கல் வீசியவர்களை கைதுசெய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிலைகளை எடுத்துச்சென்ற வாகனங்களை வத்தலக்குண்டு – மதுரை சாலையில் உள்ள உசிலம்பட்டி பிரிவு அருகே நிறுத்திவிட்டு, இந்து முன்னணி அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்ப இடத்திற்குவந்த திண்டுக்கல் சரக டிஎஸ்பி. அறிவுச்செல்வம், பெரியபள்ளிவாசல் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவரைநோக்கி கல் வீசப்பட்டதால் போலீசார் மீண்டும் தடியடிநடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

மறியலில் ஈடுபட்ட இந்துமுன்னணி அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மீண்டும் எடுத்துசென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், வத்தலக்குண்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...