விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் தாசில்தார் படுகாயம்

 திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் தாசில்தார் படுகாயம் அடைந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் 56 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்றுமுன்தினம் மாலை ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலம் வத்தலக் குண்டு பஸ்நிலையத்தை கடந்து பெரியபள்ளிவாசல் பகுதி அருகே சென்றகொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்மகும்பல் சிலைகளை நோக்கி கல்வீசியது.

இந்த கல்வீச்சில் அந்தவழியாக சென்ற 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் ஊர்வல பாதுகாப்புபணிகளை மேற்கொள்ள வந்த நிலக்கோட்டை தாசில்தார் சங்கர நாராயணனுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அந்தப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக போலீசார் தடியடிநடத்தி, கூட்டத்தினரைக் கலைத்தனர். இதையடுத்து கல் வீசியவர்களை கைதுசெய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிலைகளை எடுத்துச்சென்ற வாகனங்களை வத்தலக்குண்டு – மதுரை சாலையில் உள்ள உசிலம்பட்டி பிரிவு அருகே நிறுத்திவிட்டு, இந்து முன்னணி அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்ப இடத்திற்குவந்த திண்டுக்கல் சரக டிஎஸ்பி. அறிவுச்செல்வம், பெரியபள்ளிவாசல் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவரைநோக்கி கல் வீசப்பட்டதால் போலீசார் மீண்டும் தடியடிநடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

மறியலில் ஈடுபட்ட இந்துமுன்னணி அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மீண்டும் எடுத்துசென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், வத்தலக்குண்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...