வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி ஜெய்ராம் ரமேஷ்க்கு மோடி கடிதம்

 அரசியல்ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்துவரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார்சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார்வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையைவிட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்தசிலையின் திறப்புவிழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

ஒருமைப்பாட்டு சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்தசிலையின் திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

‘என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!

எக்தா அறக்கட்டளை எனும் அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார்வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்புவிழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிலையின் திறப்புவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கவேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்’ என அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...