அரசியல்ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்துவரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார்சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார்வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையைவிட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்தசிலையின் திறப்புவிழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.
ஒருமைப்பாட்டு சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்தசிலையின் திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.
‘என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!
எக்தா அறக்கட்டளை எனும் அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார்வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்புவிழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த சிலையின் திறப்புவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கவேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்’ என அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.