சுதந்திர வரலாற்றை தெரிந்து கொல்வதன் வாயிலாக தேச பக்தியை வளர்த்தெடுப்போம்

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக “என் மண் என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று தனது 103 வது மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் பட்டிதொட்டிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டும், மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டும் அமுதக்கலச யாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறது நிறைவாக சேகரிக்கப்பட்ட மண் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு புதுடில்லியின் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே, ‘அமுதப்பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கான அடையாளங்களுள் ஒன்றாக இது இருக்க போவது உறுதி.

இதைப் போன்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக அக்டோபர்-31-2013 அன்று, இந்திய விடுதலை இயக்க தலைவர்களில் ஒருவரும், முதல் உள்துறை அமைச்சரும், இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுடன் இணைய மறுத்து நாடு முழுவதும் சிதறி கிடந்த 500க்கும் அதிகமான சமஸ்தானங்களை இரும்பு கரம் கொண்டு இணைத்த இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார். அதற்கு இந்திய ஒற்றுமை சிலை என பெயரிட்டு, நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகளிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்தாத இரும்புக் கருவிகளை நன்கொடையாக பெற்று, அதை கொண்டு சிலை வடித்து பாரத பிரதமராக அக்டோபர்-31-2018 அன்று அதை திறந்தும் வைத்தார்.

அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலையம் எழுப்ப நாடு முழுவதிலுமிருந்துஜாதி, மதங்களை கடந்து செங்கல் பெறப்பட்டு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

தேசியமோ, தெய்வீகமோ எதுவாயினும் நாட்டின் நன்மைக்கு, வளர்ச்சிக்கு தேசிய ஒருமைப்பாடு மிக அவசியம் என்பதற்கான சான்றுகள் இவை. மத,ஜாதி, மொழி மற்றும் மாநிலங்களுக் இடையேயான பேதங்கள் மக்களை முக்கிய விஷயங்களில் இருந்து திசைதிருப்பி விடுகிறது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவர்களை அறியாமலேயே அவர்களை ஈடுபட செய்துவிடுகிறது. தேசம் முழுவதும் ஒரே மாதிரியான மனோபாவங்களை வளர்த்தெடுப்பதன் வாயிலாக மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும். அதை தேசபக்தியை வளர்ப்பதன் வாயிலாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறை தெரிந்து கொள்வதன் வாயிலாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.

நன்றி; தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.