சுதந்திர வரலாற்றை தெரிந்து கொல்வதன் வாயிலாக தேச பக்தியை வளர்த்தெடுப்போம்

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக “என் மண் என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று தனது 103 வது மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் பட்டிதொட்டிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டும், மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டும் அமுதக்கலச யாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறது நிறைவாக சேகரிக்கப்பட்ட மண் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு புதுடில்லியின் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே, ‘அமுதப்பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கான அடையாளங்களுள் ஒன்றாக இது இருக்க போவது உறுதி.

இதைப் போன்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக அக்டோபர்-31-2013 அன்று, இந்திய விடுதலை இயக்க தலைவர்களில் ஒருவரும், முதல் உள்துறை அமைச்சரும், இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுடன் இணைய மறுத்து நாடு முழுவதும் சிதறி கிடந்த 500க்கும் அதிகமான சமஸ்தானங்களை இரும்பு கரம் கொண்டு இணைத்த இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார். அதற்கு இந்திய ஒற்றுமை சிலை என பெயரிட்டு, நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகளிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்தாத இரும்புக் கருவிகளை நன்கொடையாக பெற்று, அதை கொண்டு சிலை வடித்து பாரத பிரதமராக அக்டோபர்-31-2018 அன்று அதை திறந்தும் வைத்தார்.

அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலையம் எழுப்ப நாடு முழுவதிலுமிருந்துஜாதி, மதங்களை கடந்து செங்கல் பெறப்பட்டு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

தேசியமோ, தெய்வீகமோ எதுவாயினும் நாட்டின் நன்மைக்கு, வளர்ச்சிக்கு தேசிய ஒருமைப்பாடு மிக அவசியம் என்பதற்கான சான்றுகள் இவை. மத,ஜாதி, மொழி மற்றும் மாநிலங்களுக் இடையேயான பேதங்கள் மக்களை முக்கிய விஷயங்களில் இருந்து திசைதிருப்பி விடுகிறது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவர்களை அறியாமலேயே அவர்களை ஈடுபட செய்துவிடுகிறது. தேசம் முழுவதும் ஒரே மாதிரியான மனோபாவங்களை வளர்த்தெடுப்பதன் வாயிலாக மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும். அதை தேசபக்தியை வளர்ப்பதன் வாயிலாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறை தெரிந்து கொள்வதன் வாயிலாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.

நன்றி; தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...