சிறுமதி படைத்த ப.சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ்,சை விமர்சிக்கலாமா .

 இளவரசர் ராகுல் காந்தியின் தவறான பேச்சால், கொள்கையால், செய்கையால், கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமானது. ஆனாலும்.. அந்த தொடரும் உளறல்களால், நாடு நன்மை அடையப்போகிறது இன்று. ஆம்.ராஜஸ்தானில் அவரது "ஐ.எஸ்.ஐ." உளறல்கள், அவரது, பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் போல நானும் கொல்லப்படுவேன் " என்ற ஒப்பாரிகள், இன்று மக்களிடையே அவரது "அசல் முகத்தை காட்டி". நரேந்திர மோடிக்கு மேலும் ஆதரவை கூட்டி வருகிறது..

அதே மாதிரி இன்று ராகுலின் ஒப்பாரி கூட்டத்தில் மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார்..அவர்தான் செட்டிநாட்டு மக்களின் பெயரை கெடுக்க வந்த ப.சிதம்பரம் அவர்கள்.

வல்லபாய் பட்டேலும் சரி, கபூர் கமிஷனும் சரி, பிற்காலத்தில் ஜவர்ஹர்லால் நேருவும் சரி,  காந்திகொலைக்கும் ஆர்.எஸ். எசுக்கும்,எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பளித்த பின்பும், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதை உறுதி செய்தபின்பும், "சிறுமதி " படைத்த ப.சிதம்பரம் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்,சை தொடர்பு படுத்தி பேசுவது, சட்டவிரோதம், மட்டுமல்ல..கோர்ட்டை அவமதித்ததும் ஆகும்…

எனவே அவர்மீது "கோர்ட் அவமதிப்பு வழக்கு மற்றும் மான நஷ்ட்ட வழக்கும் " தொடரவேண்டும்..

அவரது சிந்தனைகள் (அப்படி ஒன்று இருந்தால் ) செத்துப் போய் விட்டது. மண்டை கனத்துப் போய் விட்டத்து..மனம் மற(ந )த்துப் போய் விட்டது….அதனால் தான் திருச்சி பொது கூட்டத்தில் வல்லவன் வாஜ்பாயை அமரராக்கி  ஆனந்தம் கண்டிருக்கிறார்..

யார் இருக்கிறார்…இல்லை..என்பதைக்கூட நினைவில் வைக்க முடியாதவர் இந்தியாவின் "பொக்கிஷ" மந்திரி..நேற்று திருச்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் "அமரரான வாஜ்பாயை பற்றி பேசுவது சரியாகாது" என "தவறாக " பேசியுள்ளார்..மேடையில் இருந்த நம் முன்னாள் சகா ..இந்நாள் காங்கிரஸ் ..திருநாவுக்கரசரும், சிதம்பரத்தின் மைந்தர் கார்த்தியும், தலையில் கைவைத்து கொண்டனராம்..நாட்டு மக்களும், ப.சிதம்பரத்தின் இந்த பயித்தியக்காரத்தனமான பேச்சால், தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கின்றனர்..

 நேற்று திருச்சி கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஐ வரிக்கு வரி திட்டி தீர்த்த இதே சிதம்பரம்தான், 2001 ஆம் ஆண்டு இரும்பு மனிதர் அத்வானியின் வீட்டுக்கு சென்று என்னை பாஜகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..என மன்றாடியதும், இளகிப்போன அத்வானி அங்கிருந்து இதே திருச்சியில் இருந்த இல.கணேசனிடம் கருத்து கேட்டதும், தலைவனின் கருத்துக்கு முதன்முறையாக எதிர்கருத்து தெரிவித்து "இந்த புல்லுருவியை சேர்க்கவேண்டாம்" என தெரிவித்ததும், அப்படி விரட்டி விடப்பட்டவர்தான் இந்த ப.சிதம்பரம் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இந்திய அரசியல் இப்போது ஒரு புதிய பரிணாமத்தில் செல்கிறது..கடந்த 10 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரத்தால்" கடுமையாக விமர்சிக்கப்பட்டு, மிகப்பெரும்புகழ் பெற்ற ஒரு "பாசிட்டிவ் மனிதர்" வளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடி ..

அதேபோல் கடந்த 88 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரங்களை" கண்டு கவலைப்படாத.
மிகவேகமாக வளர்ந்து ..உயர்ந்த "பாசிட்டிவ்" இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மாளிகைகளை உருவாக்கும் மகாபாரத "மயன்" போல மனிதர்களை உருவாக்கி வருகிறது..

ஆக பதவியை விட்டு ஆட்சியை விட்டு நாட்டை விட்டு போகின்ற காலத்தில், காங்கிரசும்,  ராகுலும், சிதம்பரமும், தங்கள் தவாறன பேச்சினால், மோடியையும், ஆர். எஸ்,எஸ்.ஐயும் வளர்த்துவிட்டு செல்கின்றனர்..தவறிலும் ஒரு நல்லது செய்வதால், நரகத்தில் அவர்கள் கழிக்கும் காலத்தை குறைத்து விடுமாறு எல்லாம் வல்ல எமதர்ம ராஜனை பிராத்திக்கிறேன்

 

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.