மாயாவதிக்கு 3 அரசு பங்களா

 மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறது.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், திமுக. இரண்டும் விலகிவிட்டதால் இப்போதைக்கு மாயாவதி கட்சியைத் தான் மத்திய அரசு மலைபோல நம்பி உள்ளது.

மாயாவதி கொடுக்கும் ஆதரவுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மத்திய அரசு திரும்பபெற வைத்தது. அதன் பிறகு மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி பணத்தை முடக்கிவைத்ததில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் மாயாவதிக்கு டெல்லியின் முக்கியபகுதியில் 3 அரசு பங்களாக்களை மத்தியஅரசு ஒதுக்கி கொடுத்திருப்பது தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த 3 பங்களாக்களும் பாராளுமன்றம் அருகே குருத்வாரா ரகப்கஞ்ச் சாலையில் மிக முக்கியமான லுட்யென்ஸ் மண்டலத்தில் உள்ளது.

மாயாவதி, பகுஜன்சமாஜ் கட்சி மற்றும் அந்தகட்சி நடத்தும் டிரஸ்ட் ஆகிய 3 பெயர்களில் இந்த 3 பங்களாக்களை மத்திய ஊரக அமைச்சகம் ஒதுக்கீடுசெய்துள்ளது. அந்த பங்களாக்கள் ஒவ்வொன்றும் தலா 4 படுக்கை அறை வசதிகொண்டது.

இந்த 3 பங்களாக்களையும் ஒன்றாக இணைத்து பகுஜன்சமாஜ் கட்சியின் டிரஸ்ட்பெயரில் மாற்றி உள்ளனர். அரசு பங்களாக்களை எம்பி.க்கள் யாரும் இடித்துக் கட்டக்கூடாது என்று விதி உள்ளது.

ஆனால் அந்தவிதியை மீறி மாயாவதி அந்த 3 பங்களாக்களிலும் மாற்றங்கள்செய்துள்ளார்.இந்த 3 பங்களாக்கள்தவிர குருத்வாரா ரகப்கஞ்ச் சாலையில் மாயாவதிக்கு 4–ம் நம்பர் வீடு ஒன்றும் தனியாக உள்ளது. இதன் மூலம் மாயாவதிக்கு 4 பங்களாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு பாஜக. கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசை ஆதரிக்கும் ஒரேகாரணத்துக்காக அளவுக்கு அதிகமாக சலுகைகள் காட்டப்படுவதாக பாஜக. குற்றஞ்சாட்டி உள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...