கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்? மத்திய நிதி அமைச்சர் கேள்வி

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் மவுனம்காப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

கண்டனம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்தசம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

மவுனம்

கள்ளச்சாராய பலிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடாமல் மவுனம் காப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மூலம் லைசென்ஸ் பெற்று மதுவிநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதற்குமாறாக, கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் எங்கே போனார்கள். வெற்றி உறுதி என தெரிந்ததால், லோக்சபா தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். ஆனால், கள்ளச்சாராயத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால், ராகுலிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வெளிவராது.

 

அனுமதி மறுப்பு

1971 ல் வழங்கப்பட்ட பல நல்ல அறிவுரைகளையும் மீறி, தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கிய திமுக அரசு மதுவை அறிமுகப்படுத்தியது. இதற்கு பிறகு, ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்தது. இன்று அரசே டாஸ்மாக் மூலம் மது விநியோகம் செய்கிறது. இந்த கடைகள் மாநிலம் முழுவதும் உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால், மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சியதே காரணம். 5 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த திமுக அரசு அனுமதி மறுக்கிறது.

 

வலியுறுத்தல்

இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க  சார்பில் வலியுறுத்துகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவுஅளிப்பதால் மாநிலஅரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...