திமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை. இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர் லோக்சபாதேர்தலில், விஜயகாந்த் நிச்சயம் நல்ல கூட்டணி அமைப்பார், என்று , பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக., பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்த் மனைவி, பிரேமலதா பேசியதாவது: கடந்த திமுக., ஆட்சியில், எங்கள் திருமணமண்டபத்தை இடித்தனர்; வருமானவரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர்.
அதை, தங்களின், டிவியில் நேரடியாக ஒளிபரப்பும்செய்து, அசிங்கப்படுத்தினர். திமுக.,வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. ஜெயலலிதாவும், இப்போது வழக்குமேல் வழக்கு போட்டுவருகிறார். இருப்பினும் இந்த தேர்தலில் நிச்சயம் நல்லகூட்டணி அமையும். என்று பிரேமலதா பேசினார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.