மோடியின் பலம் என்ன?

 "மோடி எங்களுக்கு ஒரு சவால்" என்று எந்த வாய் கூறியது? 'மோடியின் பலம் தெரியாமல் அவரைப் பிரதமராக்குவது அழிவில் முடியும்' என்று அதே வாய்தான் கூறுகிறது. ஆம்! சாட்சாத் மவுனகுரு மன்மோகனேதான்! ராமன் இருக்கும்வரை எனது பெயர் இருக்கும், அது போதும் எனக்கு என்றான் ராவணன். ராமன் யார் என்பதில் யாருக்கும்

சந்தேகம் இல்லை. ராவணன் மன்மோகனா, ராகுலா என்பதில்தான் பலத்த போட்டி. மன்மோகன்சிங்கின் பலம், அப்படி ஒன்று இருந்தால், என்ன என்பது நாட்டிற்கே நன்கு தெரியும். இவர் பின்னால் நிற்பவர்களின் எண்ணிக்கையை இரு கை விரல்களில் அடக்கிவிடலாம். இவர்தான் பிரதமர் என்பது நமது ஜனநாயகத்தின் பலவீனம். இவரைப்போன்ற சிதம்பரம், கபில்சிபல், மணிசங்கரய்யர் போன்றவர்களின் பிடியில்தான் நமது நாடு. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று மோடி போன்ற மக்கள் தலைவர்களைப்பற்றி இவர்கள் இதையும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்.

காங்கிரஸ் கைவசம் வைத்திருக்கும் முகமூடிகள் ஏராளம். பொருளாதாரத்திற்கு மன்மோகன், சிதம்பரம் என்று ஒரு பட்டாளம். இளைஞர்களைக்கவர வேண்டுமே, சச்சினுக்கு வலை விரித்திருக்கிறார்கள். கொள்கைகளைப்பரப்ப ஒரு குத்து ரம்யா. இவர்கள் விளம்புவதை விலாவரியாக அராய்ந்து எழுத இவர்களுக்கென்று சில பத்திரிகையாளர்கள். ஆண்டிகள்கூடி மடம் கட்டினாலும் கட்டிவிடுவார்கள், இவர்கள் இருப்பதை இடிக்காமல் இருந்தாலே புண்ணியம்.

ஒரு காரியத்தை செய்யமுடியாததற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாம். ஆனால், ஆயிரம் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணத்தை உங்களால் கூற முடியும? நமது பிரதமரால் முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் மோடிதான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

ஏற்கனவே நாம் மீண்டும், மீண்டும் எழுதியதைப்போல தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரசின் திசைதிருப்பும் வேலைகள் அதிகரிக்கும். சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கமுடியுமா? கோத்ரா சம்பவம் ஏதோ நேற்று நடந்ததைப்போல நேர்முக வர்ணனை செய்வார்கள். இது அவர்களது ஐந்தாண்டுத்திட்டமல்ல, ஐம்பதாண்டுகளுக்கு மேலும் இதுதான் தொடரும்.

மவுனகுரு மன்மோகன் மோடியை அழிவு சக்தி என்று கீழ்த்தரமாகவும், நாகரீகமற்ற முறையிலும் விமரிசிப்பதன் நோக்கமே பிஜேபியை சீண்டவேண்டும், அவர்களை தேவையற்ற விவாதங்களுக்கு இழுக்க வேண்டும், தேவையான விவாதங்களை முடக்கவேண்டும் என்பதுதான். இப்போதுகூட நம்மை லாவணிபாட வைத்துவிட்டாரே! இவர் லேசுப்பட்ட மனிதர் அல்ல!

நன்றி தாமரை மலரட்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...