ராகுல் மீது நம்பிக்கை வைத்து எதையும் எதிர்பார்க்க வில்லை

 1984ஆம் ஆண்டு சீக்கிய படுகொலை குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நவ் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, சீக்கியர் படுகொலை வேறு- குஜராத்படுகொலை வேறு. குஜராத் படுகொலையை அம்மாநில அரசு நிகழ்த்தியது. சீக்கிய படுகொலையை ராஜிவ் அரசு தடுக்கமுயற்சித்தது என்று கூறியிருந்தார்.

இதை நிராகரித்து பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கூறியுள்ளதாவது: 1984 ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித் தான் ராகுல்காந்தி சொல்கிறாரோ? 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப் பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவ மனையில் இருந்து வன்முறைவெடித்தது..

காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமைதாங்கினர். ஆயிரக் கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒருஇடத்திலும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. எவர்மீதும் வழக்குப் பதிவு செய்ய வில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின்போது ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக் காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்படியான நிலையில் குஜராத் அரசுதான் 2002ஆம் ஆண்டு வன்முறையை நிகழ்த்தியது என்று எப்படி சொல்லலாம்? ஊழல் விவகாரத்தில் சமரசம போக்கைதான் ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார். வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் என்கிறார் ராகுல். ஒன்றுமட்டும் நிச்சயம் இந்தியா.. ராகுல் மீது நம்பிக்கைவைத்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்றார்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...