திமுக., அதிமுக. இல்லாத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர்

 விருது நகர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய திருப்பரங் குன்றம், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்றன.

கூட்டத்தில் மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் திமுக. மீது அதிருப்தி அடையும்போது அதிமுக.விற்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். அதிமுக. மீது அதிருப்தி அடையும் போது திமுக. விற்கு வாக்களிக்கிறார்கள். இந்த அதிருப்தியால் இதற்கு அப்பாற்பட்டு வாக்களிக்க நினைக்கிறார்கள்.

ஆனால் அந்த ஓட்டு சிதறிவிடக் கூடாது, வீணாகி விடக் கூடாது என்பதால் அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். இந்தமாதிரியான எதிர்மறை நேற்றுவரை இருந்தது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக., அதிமுக. இல்லாத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். புதியவிடியலாக இந்தியாவில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எனவே எங்களுக்கே வெற்றி உறுதி.

தமிழகத்தை தவிர்த்து தனியாக 250 இடங்களில் பாஜக வெற்றிபெறும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நரேந்திரமோடியிடம் வலியுறுத்தி உள்ளேன். அதை செய்வார் என்று நம்புகிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...