கடந்த கால தவறுகள் அனைத்தும் விசாரிக்கப்படும்

 கடந்த கால தவறுகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து மக்களவை அதிமுக கட்சித் தலைவர் தம்பி துரை எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலின்போது ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு கூறினார்.

மக்களவையில் தம்பிதுரை பேசும்போது, “சட்டவிரோதமாக 360 தொலை பேசி இணைப்புகள் பெற்றதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரித்துவரும் வழக்கின் நிலை என்ன? என்றார்.

அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும் போது, “இதுதொடர்பான விவரங்களை விரைவில் சேகரித்து அவையில் அளிக்கிறேன். அலுவலக அதிகாரிகள் நிலையில் நடத்தப்பட்ட கருத்துப் பரிமாற்ற ங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து பின்னர் அவையில் தெரிவிக்கிறேன்” என்றார்.

அதன்பின்பு, “இந்தவழக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளில் முடியும்” என்று தம்பிதுரை மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கடந்த காலங்களில் நடந்த தவறுகள் அனைத்தையும் விசாரிப்பதில் எங்கள் அரசு முனைப்பு காட்டும்.இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், குற்றவாளிகள் யாரையும் அரசு தப்பவிடாது” என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...