வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் மோடி ஜெய்சங்கர் ஆலோசனை

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.

கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாைஸ சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்து வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்கான் மற்றும் ராமகிருஷ்ண இயக்கம் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தியது.

பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் மனிதகுலத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில் ஐ.நா., சபையின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது,” என மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடன் அவர் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் � ...

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் � ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணை� ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மிகவும் துல்லியமான தாக்குதல் R ...

மிகவும் துல்லியமான தாக்குதல் – சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர� ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின்முகாம்களைநிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...