வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் மோடி ஜெய்சங்கர் ஆலோசனை

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.

கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாைஸ சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்து வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்கான் மற்றும் ராமகிருஷ்ண இயக்கம் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தியது.

பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் மனிதகுலத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில் ஐ.நா., சபையின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது,” என மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடன் அவர் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...