விதுரர் பாகம் 1

 மகாபாரதம் என்னும் இதிகாசம் முழுதும் பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளையும் அதர்மங்களையும் கொண்டதாக இருப்பினும் அதில் மறக்க இயலாத கதாபாத்திரங்கள் பலதையும் தன்னகத்தே கொண்டுள்ளது!! அதிலே ஒரு பாத்திரம்தான் மகாபாரதத்தில் 'மகாத்மா' என்ற பெயர் பெற்ற விதுரர்!!


விதுரனின் கதை நமக்கெல்லாம் ஒரு பாடம்!! ஒரு கோணத்தில் மட்டுமல்ல பல கோணங்களில்!! 'தர்மம்' காப்பதில், தர்மத்தை எடுத்துரைப்பதில் எந்த விதமான சிக்கலான சூழலிலும் கூடத் தன்னிலை மாறாமல் இருந்த ஒரே தர்மவான் விதுரன் மட்டுமே!! அது மட்டுமல்ல பிறப்பினால் உண்டாவதல்ல சிறப்பு என்னும் மொழியை நிரூபிக்கும் மாமனிதனாக விதுரர் நிற்கிறார்!!

விதுரரின் பிறப்பு பற்றி யோசித்துப் பார்த்தால் பெரும் வியப்புண்டாகிறது!! அவர் தர்மதேவதையின் அம்சமாகவே சொல்லப் படுகிறார்!! நான் முந்தைய அம்பையின் கதையில் சொன்ன விசித்திரவீரியன் அம்பிகை மற்றும் அம்பாலிகை இரு சகோதரிகளை மணந்த கதையை அறிவீர்கள்!! அதன் பின்னர் நடந்த நிகழ்வில் விதுரரின் பிறப்பு வருகிறது!!!

பெயருக்கேற்ப விசித்திரவீரியன் ஏதோ ஒரு விசித்திரமான வீரியக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டு அவனுக்கு வாரிசின்றிப் போனது! அது குறித்து அரச வம்சம் விளங்க வேண்டுமே என்னும் கவலை கொண்ட பீஷ்மர் ஒரு முடிவு செய்தார்!! அதுவே வியாசமுனிவர் மூலம் அம்பிகையும் அம்பாலிகையும் 'கர்ப்ப தானம்' பெறுவது!!

இது சற்று இன்றைய சூழலில் சிந்தித்துப் பார்த்தால் கொஞ்சம் ஆபாசமாகத் தோன்றலாம்!! ஆனால் அன்றைய மக்கள் காமத்தை வாரிசு உருவாக்கும் ஒரு விஷயமாகவே மட்டும் எடுத்துக் கொண்டு அதில் அதிக ஈடுபாடு கொள்ளாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!! இந்நிலையில் மன்னனுக்கு வாரிசின்றிப் போகாமல் இருக்க ஓர் நல்ல ஞானி, ரிஷி,முனிவர் மூலம் கர்ப்பதானம் பெறுவதென்பது அன்று நடைமுறையில் இருந்த விஷயமே!! இது மரபியல் ரீதியில் நல்லதொரு வாரிசு உருவாக்கும் முறையாகவே சொல்லப் பட்டது!! அதே போல கர்ப்பதானம் தரும் ஞானியும் கூட அதில் பெரிய ஈடுபாடின்றி ஒரு சேவை போலவே செய்து வந்தனர்!!

இந்நிலையில் கர்ப்பதானம் தர முன்வந்த வியாச ரிஷியின் மூலம் என்ன நிகழ்ந்தது என்பதையும் அதில் எவ்விதமாக விதுரர் பிறந்தார் என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!!

நன்றி ;#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

தொடரும் …..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...